ஏர்வாடி இராதகிருஷ்ணன் கவிதை

வந்து போகக் கூடாதா
என்றாள்.
போவதற்காக ஏன் வருவது
என்றேன்.

வந்து போய் இருக்கலாமே
என்றாள்.
வந்து போய் விட்டால் எங்கிருப்பது
என்றேன்.

நீ வரவே வேண்டாம் போ
என்று போய் விட்டாள்.