அழகியசிங்கர்/பேருந்து நிறுத்தம்

18 கே பேருந்து நிறுத்தத்தில்
நின்று கொண்டிருந்தேன்

பேருந்து இன்னும் வரவில்லை

அங்கே
நின்றிருந்த பெண்ணைப் பார்த்தேன்

எங்கோ பார்த்திருக்கிறேன்
என்று மனம் சொல்லியது
அவளையே
உற்றுப் பார்த்தேன்.

அவள் திடீரென்று
என் பக்கத்தில்
வந்து நின்று
‘ஐ லவ் யூ’ என்றாள்.