ஷண்முக சுப்பையா/கேள்விகள்

திருடனைப் பிடித்து
சிறையினில் அடைத்தால்
குறைந்திடுமா திருட்டு?

கொலைஞனைப் பிடித்து
கழுவினில் ஏற்றினால்
ஒழிந்திடுமா கொலை?

விபசாரியைப் பிடித்து
சீர்திருத்தினால்
தீர்ந்திடுமா விபசாரம்?