நாகேந்திர பாரதி/நம்பிக்கை

கோயில் கிடையாது
கோபுரம் கிடையாது

உண்டியல் கிடையாது
ஊரும் கிடையாது

ஒதுக்குப் புறத்திலே
ஒத்தை வேப்பமரம்

குத்திவச்ச வேல் கம்பு
குதிரையிலே முனுசாமி

கும்பிட்டுப் போனாலே
கூடுறதாம் நெனைச்சதெல்லாம்

பத்துத் தலைமுறையாய்ப்
பத்து ஊரு சனத்திற்கும்