Skip to content
- காலையில் டூவீலரை
ஓட்டிக் கொண்டு
போனபோது இந்த
வரி மனதில்
கரை புரண்டோடியது
என்ன செய்வது
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
- நம் கவிதைகளை யாரும் படிக்கத்
தயாராயில்லை அதனால் என்ன? எழுதிய
கவிதைகளை நாமே ரசிக்கும்போது இருக்கிறது
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
- கடிக்கப் பல் இல்லை எனக்கு
ஆனால் பக்கோடா கடிக்க ஆர்வம்
எப்படியோ கடித்துச் சாப்பிட்டு விட்டேன் .
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
- இந்தப் புத்தகக் காட்சியில் அடுக்கி வைத்த
கவிதைத் தொகுதிகள் எல்லாம் ஏமாற்றம்
அளித்தன எதுவும் என்னைவிட்டு நகரவில்லை
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
- வெகு நாட்கள் கழித்து சந்திக்கிற
நண்பர்களென்றால் சந்தோஷம் அடைந்து விடுகிறோம்.
அதுவும் பெண்களென்றால் கேட்கவே வேண்டாம்.
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்