நாகேந்திர பாரதி/கோலம்

அவள் போட்ட
கோலத்தின் நடுவே
பூசணிப்பூ வைக்கும்
பொறுப்பு அவனது

அந்த ஊருணித் தோட்டத்தில்
பூத்த பூவெல்லாம்
காயாகிப் பழுத்த
காலமும் ஆனது

அவன் கனவுத் தோட்டத்தில்
பூத்த பூவெல்லாம்
சருகாய் ஆனது
கோலமும் போனது