
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
புத்தகங்களை
புரட்டிப் பார்த்தேன்.
எழுதியதெல்லாம்
எடுத்துப் பார்த்தேன்.
மூளை முழுதும்
கசக்கிப் பார்த்தேன்.
எண்ணி எண்ணி
நிலை குலைந்தேன்.
கவிதை ஒன்றும் பிறக்கவில்லை.
பறவை ஒன்று பறந்து வந்து
படபடவென்று சிறகடிக்க
சாளரம் வழியே
எட்டிப் பார்த்தேன்.
கவிதை பிறந்தது

Arumai!❤️🙏