
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
எல்லாமே பக்கத்தில்
இருந்ததாய் ஞாபகம்
நிலமும் நீரும்
நெருப்பும் காற்றும்
வண்ணமும் வாசமும்
எண்ணமும் செயலும்
எல்லாம் புதிதாய்
எல்லாம் இன்பமாய்
மண்ணை விட்டு
விண்ணை நோக்கி
கழுத்தும் நீண்டது
காலமும் மாறியது
