சுரேஷ் ராஜகோபால்/இதய தீபம்

இதய தீபத்தை
யாரோ தூண்டிவிட்டார்
பளிச்சென வெளிச்சம் பரவியது
இருள் மெல்ல விலகியது. 1

எனக்குள் ஒளி வந்தது
இத்தனை நாள்
அது எங்கிருந்ததோ
இப்போதாவது வந்ததே மகிழ்ச்சி. 2

என்னோடு மகிழப் பலரிருக்க
மகிழ்ச்சி தளும்பியது
ஒளி வெள்ளத்தே
உலகம் மகிழட்டும் . 3