நாகேந்திர பாரதி/மழை

இன்றைய சொல் புதிது நிகழ்வில் உடனடிக் கவிதை தலைப்பு ‘ மழை ‘ க்கு நான் எழுதிய கவிதை

பேஞ்சும் கெடுக்கும்
காஞ்சும் கெடுக்கும்

மழை மட்டுமா
மனமும் கூடத்தான்

அடங்கி வந்தால்
அமிர்தமாய் இனிக்கும்

அடங்க மறுத்தால்
நஞ்சாய் மாறும்

ஆறும் குளமுமாய்
அமைந்து போனாலும்

சேரப் போவது
கடலில் தானே

ஜீவன் சேர்வது
பரத்தில் என்ற

சேதி புரிந்தால்
சிரமம் இல்லை

ஆறும் மனம்
அமைதிக் குளம்