கட்டுடைக்கும் சொற்படலம்/வசந்ததீபன்

வார்த்தைக்குள்
வார்த்தை
பொதிந்து
வார்த்தை பண்ணி…
கொதிக்கும்
நிறைவின்மையிலிட்டு
அதை
பொரித்தெடுத்து…
வேதனையைப் பிழிந்து
அதில்
ஊற வைத்து…
மெளனத்தில்
அள்ளிப் போட்டு
உலர வைக்கிறார்கள்

வாசனை பிடித்து வரும்
நாய்கள்..
பூனைகள்..
எலிகள்..
இன்னும் பிற
ஜீவராசிகளுக்கு
பின்பு
பரிமாறுகிறார்கள்.

விக்கிச் செத்தாலோ..
விழுங்கிக் செத்தாலோ..
கவலை கொள்ளாது
புழுத்து நாறிக் கிடக்கும்
பிணங்களுக்கு
மத்தியில்
கனவு கண்டு கொண்டே
கவிதை நெய்கிறார்கள்.

🦀