பி. ஆர்.கிரிஜா/கொசு !

பரமனின் படைப்பில்
விந்தைகள் கோடி
எடுத்தியம்ப
இயலாத செயல் !

எமை நசுக்கி உயிர் வாழும் உரிமை
யார் உமக்குக்
கொடுத்தார்கள் ?

எமைப் படைத்த
இறைவனிடம்
எல்லாம் அறிந்த நீ
கேட்கக்கூடிய வினா !

எம் பிறப்பில் குறை
எதுவாக இருப்பினும்
பரம்பொருளே அதன்
மூல காரணகர்த்தா !

இதை அறிந்தால்
உன் மனம்
அமைதியில்
மடங்கி அடங்கி விடும்

புற இருள் மறைந்து
அகத்தில் ஒளி வீசும்
அவனருள் உனை
ஆட்கொண்டால் !

One Comment on “பி. ஆர்.கிரிஜா/கொசு !”

Comments are closed.