சசிகலா விஸ்வநாதன்/ஏதோவொன்று

இத்தனை நாட்கள்
ஏதோவொன்று என்னை உந்த,

ஏதோவொன்று என்ன, என
அறியாமல்;

ஏதோவொன்று,
ஏதுவாய் இருந்தாலும் என்ன,

ஏதோவொன்று, என வாழ்ந்தேன்.

ஏதோவொன்று என
அனைத்தையும் சுகித்தேன்.

ஏதோவொன்று, அலுப்பு தட்ட,

ஏதோவொன்று
வேண்டும் என,

ஏதோவொன்று, எது எனத் தேட,

ஏதோவொன்று
என்னை என்னவோ செய்ய,

ஏதோவொன்று என்னை கூட்டிச் சென்றது.

சொல்லாமலே.