
அழகியசிங்கரின் இன்றைய ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – நாகேந்திர பாரதி
விட்டுப் போவதால்
வருவது சுதந்திரம்
விடுவதும் வ்ருவதும்
சுதந்திரச் சுற்று
கவிதை எழுதிவிட்டால்
கற்பனை விடுதலை
கண்ணீர் விட்டு விட்டால்
சோகம் விடுதலை
பூக்கள் பூத்துவிட்டால்
மொட்டுக்கள் விடுதலை
பொழுது விடிந்துவிட்டால்
சூரியன் விடுதலை
விடுதலை கிடைத்ததால்
சுதந்திரம் கிடைத்ததா
சுதந்திரம் வந்தபின்
விடுதலை கிடைத்ததா
எழுதிய கவிதையையும்
விட்ட கண்ணீரையும்
பூத்த பூக்களையும்
விடிந்த பொழுதையும்
கேட்டுப் பார்த்தால்
புரியலாம் கொஞ்சம்
விட்டுப் போனதால்
வந்ததா சுதந்திரம்
