டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 2

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்

மஞ்சள் நீராட்டு
குங்குமப் பொட்டு
கழுத்தில் மாலை

ஆட்டிற்கோ ஆனந்தம்
விடை அறியாததால்

நேர்த்திக்கடன் ஆண்டவனுக்கு
நிறைவேற்றப் போவதால்
பக்தனுக்கோ ஆனந்தம்

தான் படைத்த உயிர்களில்
தன் பெயரைச் சொல்லி
ஒன்று பலியாவதால்
இறைவனுக்கோ கண்ணீர்

கண்டிப்பாக
ஆனந்தக் கண்ணீர் அல்ல

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 3 – விருட்சம் நாளிதழ்