தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்

தத்துவம்தானே? வெங்காயம்!
போடா! போ!
மூடியதை மூடிப்
பின்மூடி?...முடிவா?...
உரித்தால்? மேலும் உரித்தால்?
கண்ணீர் கொட்டும்
முட்டாளுக்கு உருக்கம்:
மூளைமோதினால்
தலைக்குத் தேங்காய்!
உனக்கும் எனக்கும்
முடிந்தால்
இதயத்துக்கு மருந்து;
அநேகருக்கு
வயிற்றை நிரப்ப
வேகும் கூத்துத்தான்!
வெட்டித் தனமாய்
வேடிக்கையாய்
அட; வீம்புக்குத்தான்
வைத்தாலும்
தோலுரிக்கும் தொல்லையின்றி
வேறென்ன கண்டபயன்?
முட்டிமோதி முடிந்தமட்டும்
பார்த்து
முக்கித் திணறி முடிவில்
சிக்காத சிக்கல் என்று
நடையைக் கட்டும்
வேலை!

