8.12.2021 – புதன்
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்.
மோகினி: நீங்கள் இப்போதெல்லாம் வெளியே போவதில்லையா?
அழகியசிங்கர் : அவசியமான இடத்துக்கு மட்டும் போகிறேன்.
ஜெகன் : யாருக்கு இந்த முறை சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்கும்.
மோகினி : ஒரு பெண் எழுத்தாளர் தீவிரமாக முயற்சி செய்வதாகக் கேள்விப் பட்டேன்.
அழகியசிங்கர் : யாருக்குக் கிடைத்தால் என்ன? அதில் எனக்கு அக்கரை இல்லை.
மோகினி : உண்மைதான்
அழகியசிங்கர் : எந்தப் பரிசும் புத்தகங்களுக்காகக் கொடுக்கப் படுவதில்லை. ஆட்களைப் பார்த்துத்தான் கொடுக்கிறார்கள்.
ஜெகன் : இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
மோகினி : நாட்டைக் காப்பவர்களுக்கே இப்படி நடந்து விட்டது சோகம்.
ஜெகன் : முப்படையின் தலைவர் ஸ்ரீ பிபின் ராவத் மரணம் பெரிய துயரத்தைத் தரக்கூடியது.
அழகியசிங்கர் : உண்மைதான் அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.
மோகினி : இதுமாதிரி விபத்தை அறியும்போது எதுவும் ஓடவில்லை.
ஜெகன் : ஆமாம். 4 மணிக்குத்தான் தொலைக்காட்சியிலே இந்தச் செய்தி தெரிந்தது.
மோகினி : தினந்தோறும் 300 பார்க்கிறார்கள் உங்கள் டெய்லியை..
அழகியசிங்கர் : ஆமாம்.
மோகினி : நகுலன் மலர் எந்த நிலையில் உள்ளது.
அழகியசிங்கர் : கூடிய சீக்கிரம் கொண்டு வந்துவிடுவேன்.
மோகினி : படைப்புகள் கிடைத்ததா?
அழகியசிங்கர் : இன்னும் பலர் நகுலனுக்காகச் சிறப்பு மலர்கள் கொண்டு வருகிறார்கள். கும்பகோணத்தில் சாகித்திய அக்காதெமி ஒரு விழா நடத்தி முடித்துவிட்டது.
மோகினி : நாமும் கொண்டு வரப்போகிறோம் ஒரு மலரை.
ஜெகன் இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.
( எழுதியது இரவு 11.18)