உலர்ந்த காலம்/வசந்ததீபன்


தொலைவுகளைத்
துழாவித் திரியும் பறவையின் முன்னே
வானம்
கறுத்துக் கொண்டிருக்கிறது.

தட்டுத் தடுமாறியபடி சரீரம்..
திரை படரும் விழிகள்..
நீண்ட ஆசுவாசம்..
நொண்டியடிக்கும் இருதயம்..

கனவுகள்
புற்றெடுக்க
நெளிந்து நெளிந்து
நுழைகிறது…
நாறியபடி
அதனுள்
நிஜம்.

அடைகாத்த பொற்கலசம்
ஆழப் புதைய
இன்றின் விஷம்
நாளை இறுகி ஒளிரும்.

நிராசைகளின் பின்னே
அலைந்தவனின்
வாழ்வில்
யாவும் நிர்மூலமாகி
தீராத வலிகளாகிப் போயின.

🦀