விசனம்

வ வே சு 

தூரலோடு ஆரம்பம்

தொடர்ந்தது ஜலதரங்கம்;

சில நிமிடச் செல்வாக்கில்

இடியுடன் கூடிய  மழை

எங்கள் தெருவெங்கும்

தலைபின்னிக் கொண்டது;

பூ வைத்துக் கொண்டது.

இதனை இரசிக்க

சாளரம் அருகே

சாய்வு நாற்காலியில்

அமர்ந்து கொண்டு

நொறுக்குத் தீனியைக்

கொறிக்க ஆரம்பித்தேன்.

மழை நின்றுவிட்டது.

One Comment on “விசனம்”

Comments are closed.