மரு.ச.கந்தசாமி/கனவு பலித்தது

மூக்காயி அதிகம் படித்தவள் .கணவன் வீரப்பன் குடிப்பழக்கத்தில் அடிமையாகி வேலை செய்யாமல் ஒரே சண்டை .அவன் தினமும் குடிபோதையில் “ஏடி நீ படித்து என்ன பெரிய கலெக்டர் வேலைக்கா போகிறாய்? பேசாமல் சமையல் செய்து சோறு போடு போதும் ” என்று மிரட்டுவான். மூக்காயி தன் இரு பிள்ளைகளுக்காக கனவை கசக்கி எறிந்து மெளனம் காத்தாள்.குடியால் கணவன் மறைய, மூக்காயி தளராமல் தான் விட்ட பத்தாம் வகுப்பு படிப்பை தொடர்ந்து தன் பிள்ளைகள் படித்த பள்ளியில் சேர்ந்து படிக்கலானாள் .அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் அவள் ஆர்வத்தை அறிந்து மூக்காயிடம் ” இந்த கஷ்டத்திலும் உன்ன அறிவு பளிச்சிடுகிறது, விடாதே மேலும் படி” என உற்சாகப்படுத்தினார். இன்று அவள் பிளஸ் டூ பரீட்சை எழுதி அந்த மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் . தலைமை ஆசிரியருக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை “என் மாணவி முக்காயி முதல் மதிப்பெண், கண்டிப்பாக நீ மருத்துவராக வேண்டும். உன் படிப்பு செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் .

முக்காயியோ, “அய்யா என் பிள்ளைகள் நன்றாக படித்தால் போதும் “என்று மறுத்தாள். பிள்ளைகளோ ” அம்மா நீதான் எங்களுக்கு முதல் உதாரணம் கண்டிப்பாக நீ டாக்டராக வேண்டும்” என அடம் பிடித்தனர். முக்காயியும் சம்மதிக்க மூக்காயி கல்லூரின் முதல் மருத்துவரானாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன