
யாருக்கு எங்கு செல்ல
வேண்டுமோ
அங்கு செல்லட்டும்
யாருக்கு எவருடன் இருக்க வேண்டுமோ
அவருடன் இருக்கட்டும்
யாருக்கு எது பிடித்திருக்கிறதோ
அதை செய்யட்டும்
யாரையும்
எந்த உறவிலும் கட்டிப்போடாதீர்கள்
யாருக்கும்
எந்த அன்பையும் திணிக்காதீர்கள்
யாரிடமும்
எந்தக் கனவையும் காணச்சொல்லி வற்புறுத்தாதீர்கள்
அன்பின் பெயரால்
காதலின் பெயரால்
கருணையின் பெயரால்
ஏற்கனவே
இங்கு
ஆயிரமாயிரம்
வன்முறைகள்
நிகழ்ந்தாயிற்று
இனி
அவரவர் வாழ்வை
அவரவர்
விருப்பம்போல
வாழட்டும்
உண்மையில்
இறுகப்பிடித்திருப்பதல்ல
சமயங்களில்
பற்றியிருந்த
அன்பின் கயிற்றை
விட்டு விடுவதும்
நேசம்தான்
இல்லையா?
–
