"அப்படி என்ன இருக்கு இந்த பட்டிக்காட்டில்னு இந்த தள்ளாத வயதில் பிடிவாதமா என்னையும் கூட்டிக்கிட்டு டில்லியில் இருந்து இந்த ஊருக்கு வந்திருக்கே பாட்டி" என்று வேண்டா வெறுப்பாக கோபமா கேட்டாள் பேத்தி வர்ஷா .
"சொல்றேன்டா கண்ணு, முதலில் ஆட்டோ பிடிச்சு அந்த கம்பர் தெருவுக்குப் போகலாம் வா " என்றாள் பாட்டி கல்யாணி.
அந்த தெருக் கோடியில் ஒரு பெரிய வீடு சிதிலமடைந்து பார்க்கவே பேய் பங்களா மாதிரி தோற்றத்தில் இருக்க , கல்யாணி அதன் முன் நின்று கண்ணீர் வழிந்தோட அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"யார் வீடு இது ? ஏன் அழறீங்க? " என்று கேள்வி கேட்ட வர்ஷாவிடம் , "நானும் உன் தாத்தாவும் ஒரு காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்த இடம்.
"உன் அப்பாவின் படிப்புக்கு வாங்கிய கடன் அடைக்க முடியலை. வேறு வழியின்றி வீட்டை வித்தார் தாத்தா. நான் சாகும் முன் கடைசியா ஒரு முறை பார்க்கணும்னு ஆசை. அதான் வந்தேன் " என்றபடி திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் கல்யாணி.