விஞ்ஞானி/ஏக்கத்தின் தாக்கம்

நட்பைப் பற்றிய
அவனது
கவிதை வரிகள்
உருக வைத்தன
நெகிழ விட்டன
சிலிர்க்க செய்தன

கலங்கிய கண்களுடன்
கவிஞனிடம் எப்படி
இப்படி எழுத முடிகிறது
என்று கேட்டதற்கு

அவன் சொன்னான்
எனக்கு நண்பர்கள்
இல்லை என்று.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன