
(1)
விற்புருவம் காட்டி வினையறுக்ககும் கோமான்;
உற்பாதம் களைந்து உன்னை மேடேற்றுவான்;
ஏற்றுக் கொள், என் சொல்லை;
நற்கதியைத் தந்தருளும் நம்பு.
🏵️
(2)
உப்புற்ற பானை இதென அறிந்தும்
சப்பற்ற வாழ்வில் மெப்புற்றது ; ஏன்?
தப்பற்ற வாழ வழி காட்டுமிறை;
நற்கதியை தந்தருளும் நம்பு.
🏵️
(3)
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்;
என்ற பயம் கொண்டு வாழ்வில்,
தற்பெருமை தவிர்த்து இருக்க, தெய்வம்
நற்கதியைத் தந்தருளும் நம்பு.
🏵️
(4)
முக்காலமும் பெற்றோரைப் பற்றி நடக்க;
எக்காலமும் உனக்கு உயர்வின்றி வேறில்லை.
எல்லாமுமாகி நிற்கும் மறையின் கூற்றிது.
நற்கதியைத் தந்தருளும் நம்பு
🏵️
(5)
பாரெங்கும் சுற்றி வந்தேன் நான்.
வேறு எங்கும் காணேன் நான்.
அறம் வளர்க்கும் நாடிது, பரம்
நற்கதியைத் தந்தருளும் நம்பு
