எம் ஷங்கர் /தீனி

“ அடியே இந்தக் கூத்த கேட்டியகளா? நம்ம பேச்சிமுத்து யாரோடையோ ஓடிப்  போயிட்டாளாம்,” வள்ளி கூறியதை கேட்டதும்,

“ அடி ஆத்தி அவளுக்கு வளந்த பிள்ளைங்க ரெண்டு இருக்கே?” பொன்னுத்தாயி அங்கலாய்த்தாள்.

“ அவ சரியான மேனாமினிக்கி. எனக்கு ரொம்ப நாளாவே அவ மேல சந்தேகம்” ஒத்தூதினாள் செண்பகம்.

“ அவ என்ன மினிக்கி என்ன பிரயோசனம். அவ புருசன முந்தானைல முடிச்சுக்க தெரியலையே?” வள்ளி தொடர்ந்தாள்.

“ அவ என்ன பண்ணுவா? அவ புருசன் தெனமும் குடிச்சுட்டு வந்து குப்புற அடிச்சு படுத்துட்டானா ?அவளும் இளம் ரத்தம் தானே. வீட்ல தீனியில்லாட்டி வெளியில மேயத்தானே போகணும்?”

“ஏய் செம்பகம் பொண்ணுத்தாயி கூட அவ பொண்ணு மல்லிகா இருக்கு. பாத்துப் பேசு”

“ அது சின்னப் புள்ள. அதுக்கு ஒன்னும் புரியாது. மல்லிகா நாங்க பேசறதயெல்லாம் காதுல போட்டுக்காதே சரியா?”

மல்லிகா மனதுக்குள், ‘ செண்பகம் அக்கா எனக்கு எல்லாம் தெரியும். அந்தப் பேச்சிமுத்து ஓடிப்போனதே ஒம் புருசன்கூடத்தானே” என்று நினைத்துக்கொண்டே தலையாட்டினாள்.

(110 words)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன