10.12.2021 – வெள்ளி
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: அப்படியென்றால் பரிசு சரியான படைப்பாளிக்குப் போவதில்லையா
அழகியசிங்கர் : பரிசு பெறுபவர் சரியான படைப்பாளியாகத்தான் இருப்பார்கள். அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால் படைப்பாளியைத் தேர்ந்தெடுப்பதற்குச் சிபாரிசு செய்யவேண்டிய நபருக்குத் தெரிய வேண்டும். அவருடைய படைப்பு தேவையில்லை.
ஜெகன் : இந்தப் புத்தகக் காட்சிக்கு விருட்சம் கலந்து கொள்ளுமா?
மோகினி : இந்த முறை என்னன்ன புத்தகங்கள் கொண்டு வந்துள்ளீர்கள்.
அழகியசிங்கர் : என் கவிதைப் புத்தகத்தைத்தான் கொண்டு வந்துள்ளேன். 400 கவிதைகள்.
மோகினி : உண்மையில் இது பெரிய சாதனை.
அழகியசிங்கர் : இன்னும் கவிதைகள் எழுதிக்கொண்டு வருகிறேன். அதையெல்லாம் தனித்தனியாகப் புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன்.
ஜெகன் : உங்களுடைய குறுங்கதைகள் புத்தகம் என்ன ஆயிற்று.
அழகியசிங்கர்: எல்லாவற்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். எப்போதும் முடியுமென்று தெரியாது.
ஜெகன் :முக்கியமாக நகுலன் சிறப்பிதழ் விருட்சம். 118வது இதழ்.
அழகியசிங்கர் : ஆமாம்.
மோகினி : தயார் செய்து விட்டீர்களா?
ஜெகன் : புத்தகக் காட்சிக்குள் முடியுமா?
மோகினி : முடித்தால்தான் சிறப்பு.
அழகியசிங்கர் : எப்படியாவது முடித்து விடுகிறேன்
மோகினி : வேற என்ன திட்டம்
அழகியசிங்கர் : நிறையா புத்தகங்கள் இன்னும் இருக்கின்றன. எப்போது முடிக்கப் போகிறேனென்று தெரியவில்லை.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன் : இன்று பேசியது போதும்
.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.
எழுதியது இரவு 10.47