அழகியசிங்கர்/விதியின் வழி எதுவோ

1.

எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து இருக்கும்
நடப்பது எல்லாம்
நம்மை அறியாமல்
வாழ்க்கையின் சில
கணங்கள் மட்டும்

விதியின் வழி எதுவோ

2.

எல்லோரும் தினமும்
அலுவலகம் போகிறார்கள்
சிறுவர்கள் பள்ளிக்கூடம்
போகக் கெடுபிடி
நான் வீட்டில்
சுதந்திரமாக இருக்கிறேன்

விதியின் வழி எதுவோ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன