
.
“இந்த ஓவியம் மிகவும் அர்த்தமுள்ளது ராகவ்.”
“. ஓவியம் சொல்லும் செய்தி?”
“ஒரு சாதாரண ஏழைத் தாய். தலையில் கடவுள் சிலைகள் நிறைந்த கூடை. இடுப்பில் தன் குழந்தை.
ஆனால் அந்த குழந்தையின் கையில் சூலம்.”
“இதன் அர்த்தம் என்ன ? அழகிய சிங்கர் இதற்கு கதை கேட்கிறார்”
“இவள்தலையில் இருப்பது மண்ணால் செய்த துர்கா. இடுப்பில் இருப்பது நிஜ துர்கா.
கொல்கத்தா குமார்டுலி தெருக்களில் பொம்மைகளை சுமந்து விற்கும் பெண் தான் உண்மையான துர்கா. அவள் தான் சுமக்கிறாள், பசியோடு நடக்கிறாள், குழந்தையை காக்கிறாள்.”
” சபாஷ் முரளி.கடவுளை தலையில் சுமப்பவள் தான் கடவுள். அதைத்தானே ஓவியம் சொல்ல வருகிறது?”
“ஆமாம்.ராகவ்.
இதையே கதையாக எழுது!”
