பி.ஆர். கிரிஜா/இருப்பது ஒரே வாழ்க்கை !

எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்
அன்பும் பண்பும் நிலைக்க வேண்டும்
நாடு செழித்து வளர வேண்டும்

இருப்பது ஒரே வாழ்க்கை !

2.
வாழ்க்கை அநித்தியம் என்று உணர்
தர்மம் நிலைக்க பாடுபடு எப்போதும்
பெரியோரை மதிக்கும் குணம் கொள்

இருப்பது ஒரே வாழ்க்கை !

வறட்சியும் வெள்ளமும் இயற்கையின் சீற்றம்
இன்பமும் துன்பமும் வருவது இயல்பு
சுயநலம் விடுத்து பொதுநலம் பேணு

இருப்பது ஒரே வாழ்க்கை !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன