26.12.2021 – ஞாயிறு
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: ஆறாம் தேதி புத்தகக் கண்காட்சி.
அழகியசிங்கர் : ஆமாம்.
ஜெகன் : உங்கள் குரல் உற்சாகமில்லாமலிருக்கிறதே ஏன்?
மோகினி : அவநம்பிக்கையோடு இருப்பதற்குக் காரணம் என்ன.
அழகியசிங்கர் : சற்று அவநம்பிக்கையோடுதான் இருக்கிறேன். புத்தகத்திற்காக அதிகமாகச் செலவு செய்யப் போவதில்லை. விருட்சம் வெளியீடாக புதிய புத்தகங்கள் குறைவாகவே வருகின்றன.
மோகினி : கொரானா பயமா?
அழகியசிங்கர் : அதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஜெகன் : ஒரு புத்தகத்தை எப்படிப் படிக்கிறீர்கள் நீங்கள்.
அழகியசிங்கர்: முதலில் நான் எந்தப் புத்தகத்தையும் படிப்பதில்லை.
ஜெகன் : என்ன சொல்கிறீர்?
அழகியசிங்கர் : என்னிடம் ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. எதையாவது எடுத்துப் படித்ôல் என் பொழுது எளிதாகப் போய்விடும்.
மோகினி :நீங்கள் அப்படிப் படிப்பதாகத் தெரியவில்லை.
ஜெகன் : புத்தகம் படிப்பதற்கு உங்களுக்கு மலைப்பாக இருக்கிறதா?
மோகினி : உங்களைச் சுற்றிலும் புத்தகங்கள் மலைபோல் குவிந்திருந்தால் சற்று அச்சமாகத்தான் இருக்கும்.
அழகியசிங்கர் :சின்ன வயதிலிருந்து எனக்குப் புத்தகங்கள் மீது ஒரு காதல் உண்டு. அந்தக் காதல் வெறியாக மாறி பார்க்கிற புத்தகங்கள் எல்லாம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். நான் இப்போது புத்தகம் சேகரிப்பதை வெறுக்கிறேன்.
ஜெகன் : ஒரு குடிகாரன் குடியை மறக்க முடியாது. ஒரு சிகரெட் பிடிப்பவன் சிகரெட் பிடித்துக்கொண்டுதான் இருப்பான். நீங்களும் அப்படித்தான்.
அழகியசிங்கர் : புத்தகத்தைச் சேர்த்துக் கொண்டே இருப்பவன்.
மோகினி : கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
அழகியசிங்கர் : மாற்றிக்கொள்கிறேன்.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.
(எழுதியது இரவு 09.55)