
அந்த புகைப்படத்தில்
வரையப்பட்ட மரத்தின்
வசந்தகாலம் நீங்கிய பின்னர்
தரை நோக்கி உதிரும் இலை
பறவையாகி
மிதந்தும் பறந்தும் உயிர்த்திருந்தது
*
மொட்டை மரம்
ஏகாந்த காகம்
தரையில் ஒற்றை இலை படகு
காற்றே மழையே
நீங்கள் யாரும் வரவேண்டும்
அந்த இலையே
அம்மரத்து வசந்தத்தின்
இறுதி சாட்சி
*
இலை இல்லை இல்லை
மரத்தின் நீட்சி
தரையில் கிடந்து தவிக்கும் போது
உயிர் துடிக்கிறது
*
மழை பொழிவில்
உடல் நனையும் கிளை மரம்
இல்லாமல் போய்விட்ட
இலைத்துளிகளுக்காக அழுகிறது
மழைநின்ற பின்னும்
*
இலை பயணித்த தேசத்தில்
எங்கேயுமில்லை தாய் மரம்
ஏந்திக் கொள்ளவும் எவரும் இல்லை
சாலையில் கிடந்து
இதயம் போல் துடிக்கிறது
அச்சிறு இலைச்சருகு
*
கடைசி இலையை
பிடிவாதமாய் காலம்
உதிர்ந்த போது
இல்லாத தன் கைகளை
நீட்டி நெஞ்சிலடித்து
புத்திர சோகத்தில் கதறிய தாய் கோலம்
பூண்டது மரம்

அழகிய சிங்கர்
இது நான் எழுதிய கவிதை இல்லை.
தவறைத் திருத்துங்கள்
லாவண்யா சத்யநாதன்.
இபோதுதான் பார்த்தேன
thank you very much.
I change the name.
azhagiyasingar