வசப்பட்டிருக்கிறது உலகம்/செ.புனிதஜோதி

வார்த்தைகளின்
காதலில் தான்
வசப்பட்டிருக்கிறது உலகம்…

வீதிதோறும்,சாலைதோறும்
வீடுதோறும்..
நின்று நின்று
பேசி பேசியே
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது
சொற்கள்

நீயும்,நானும்
அதே நதியில்தான்
மிதந்துக்கொண்டிருக்கிறோம்