எப்படியாயினும்


ஆர். வத்ஸலா


நான் எழுதிய கவிதை
நல்ல கவிதை
சுமாரான கவிதை
மோசமான கவிதை
கவிதையே அல்லாத கவிதை
உனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
அது என் கவிதை
நான் பெற்றது