ஆரோக்கியசாமிக்கு
ஆரோக்கியமாயிருக்க
சாமி அருளவில்லை.
அறிவானந்தத்திடம்
அறிவுக்கும்
ஆனந்தத்திற்கும்
பஞ்சமோ பஞ்சம்.
போதும் பொண்ணுக்கு
வரிசையாய்
மூன்றும் பெண்கள்.
வெள்ளைசாமி
கறுப்பாயிருக்கிறார்
கருப்புசாமி
வெள்ளையாயிருக்கிறார்.
இராமனுஜனுக்கும்
கணக்குக்கும்
கணக்கெட்டா தூரம்.
திருவாளர் பிச்சையிடம்
கோடி கோடியாய்
கொட்டிக் கிடக்கும் பணம்.
வணங்காமுடி
வணங்கி வணங்கி
வளைந்தே போனார்.
பெயரில் என்ன இருக்கிறது?
–