புத்தகம் வாங்க வந்தவர்/அழகியசிங்கர்

துளி – 234

ஐந்தாம் தேதிதான் அப்பா இறந்து போனார். ஐந்தாம் தேதிதான் அப்பாவின் அறை என்ற
என் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்து கொடுத்தார் பிரிண்டர். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நேற்று (ஆறாம் தேதி) ஒருவர் போன் செய்து விருட்சம் புத்தகங்கள் வாங்க வேண்டுமென்றார்.

உடனே வீட்டிற்கு வந்தும் விட்டார். அத்தனைப் புத்தகங்களும் வாங்கினார்.
என் சிறுகதைத் தொகுப்பின் முதல் பிரதி அவர்தான் வாங்கினார். அப்பாவைப்பற்றி நான் எழுதிய சிறுகதைத் தொகுப்பை வாங்க அப்பாவே  அவரை அனுப்பி வைத்ததாகத் தோன்றுகிறது.

அவருக்கு என் நன்றி உரித்தாகும்.

அவருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இங்குப் பகிர்கிறேன்.