இசைப் பாடல்/எஸ் வி வேணுகோபாலன்


தேட வைத்த தென்றலே நீ
வாட வைத்துப் போனதென்ன நியாயம்
எல்லாம் மாயம்

கூட வந்த அன்றிலே நீ
கூடுடைத்துப் போவதென்ன நியாயம்
எல்லாம் மாயம்

சரணம் 1

நாள் கணக்கில் பார்த்திருந்து
உள் மனத்தில் பூத்திருந்து
ஊர் முழுக்கப் பேச வைத்த காதல் மறக்குமா?

ஏன் மறைக்க வேண்டும் அன்பே
ஏன் மறுக்க வேண்டும் கண்ணே

வேர்ப்பிடித்து நீர் தெளித்த காதல் கருக்குமா?

(தேட வைத்த….)

சரணம் 2

நீ விரும்பிக் கேட்டிருந்த பூ அரும்பிப் பூத்திருக்க
ஏன் திரும்பிப் போக வேண்டும் நில் நீ நில்!

ஏன் நடிக்க வேண்டும் அன்பே
ஏன் துடிக்க வேண்டும் கண்ணே

வீண் பிடிவாதம் எதற்கு, சொல் நீ சொல்!

(தேட வைத்த….)