
பிரஞ்சு நாவல் இலக்கிய உலகத்திலே
உருவத்திற்கும் நடைக்கும் சிறப்பான
முக்கியத்துவம் உண்டு .இதில் முக்கிய
மான நாவலாகக் கருதப்படுவது “குறுகி
ய வழி” ஸ்டெந்தால்,பால்ஸாக்,ஃப்ளோ
பேர்,முதலிய மேதைகளுக்கு இணையா
னவர் “குறுகிய வழி” எழுதிய ஆந்த்ரே
ழீடு என்பது உண்மை.
நாவல் என்றால் என்னென்ன இலக்கண
ங்கள் அவசியம் என்று பண்டிதர்கள் சொ
ல்கிறார்களோ அத்தனை இலக்கணங்க
ளையும் மீறி அற்புதமான நாவலை நமக்
குச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் ஆந்த்
ரே ழீடு.நாட்குறிப்புகள்,கவிதை,இலக்கிய
சர்ச்சைகள் எல்லாவற்றையும் புகுத்தி
இலக்கணப் பண்டிதர்களைத் திணற அடி
த்திருக்கிறார்.உலக இலக்கியங்களிலு
ள்ள எல்லா கௌரவங்களையும் அவர்தம்
ஆயுட்காலத்திலேயே பெற்றவர்.ஒரு முப்
பது நாற்பது வருஷங்கள் பிரஞ்சுமொழி
யில் தலைசிறந்த ஆசிரியராக ஸ்தானம்
வகித்தவர்.அவருக்குப் போட்டியே இல்
லை.நோபல் பரிசு அளிக்கப்பட்டபோது
உலகில் அதுபற்றி ஆனந்திக்காத இலக்
கிய ரசிகர்கள் இல்லை என்றே சொல்ல
வேண்டும்.அவர் எழுதிய பல நூல்களை
நாவல் என்றே சொல்ல முடியாது.ஆனால்
“குறுகியவழி” என்ற நூல்தான் அவர் எழு
திய நூல்களிலே நாவல் என்ற பதத்தின்
லட்சிய உருவம்.
ழீட் நடையை மொழிபெயர்ப்பது சிரமமா
ன காரியம் என்பதை நன்கறிவேன்.
எட்டியவரையில் செய்ய முயன்றிருக்கி
றேன்.எந்த மொழிபெயர்ப்புமே ஓர் அள
வில் குறிக்கோளை எட்ட முடியாதுதான்.
ஓரளவிற்கு மூல நூலில் உள்ள சாராம்சம்
வந்துவிட்டால்போதும் என்று விட்டுவிட
வேண்டியதுதான்.ழீடின் இந்தநாவலில்
உள்ளது பூராவும் என் மொழிபெயர்ப்பில்
வந்திருக்க முடியாது என்று எனக்கு நிச்ச
யமாகத்தெரியும்.ழீடின் சிந்தனைகளை
யும்,கலையையும் ஓரளவிற்குக் காட்டியி
ருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்குண்
டு.நம் வாழ்க்கையே இந்தமாதிரி நாவல்
களால் வளம்பெறும் என்ற நம்பிக்கையி
ல் இந்தச் சிரமமான மொழிபெயர்ப்புக்
காரியங்களை மேற்கொண்டிருக்கிறேன்.
க.நா.சு
