செருப்பு/நாகேந்திர பாரதி


காட்டிலும் மேட்டிலும்
தூக்கித் திரிந்தும்

கல்லிலும் முள்ளிலும்
காத்துக் கடந்தும்

தேய்ந்தும் பிய்ந்தும்
உழைத்துக் களைத்தும்

வீட்டுக்கு உள்ளே
இடமொன்று இல்லாமல்

வெளியே கிடப்பது
செருப்பு மட்டுமா