பக்குவம்/

தி சோ வேணுகோபாலன்


அடுத்த வீட்டில்
அழுகுரல் கேட்டது;
சர்க்கரை வந்தது.
…………..
இன்று முதன் முதல்
மணவறை புகுந்தவள்
இடுப்பைப் பிசைந்தாள் !
காலண்டர் கிழித்துக்
காலம் கரையுமா?
சுமை, வலி, இல்லாமல்
சுக்கு மருந்துக்கு
ஆசைப்பட்டால் ?
…………….
உருப்படியா
வெறுங் கணக்கா
எனக்கூடப் பாராமல்
முக்கிப் பலனில்லை !
முளைத்ததெலாம் உயர்வில்லை !

வேஷம்/தி சோ வேணுகோபாலன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)