கம்பன் கவியமுதம்–31/Valavaduraiyan

கண்களை வண்டென எண்ணி மயங்கல்

                 பருவ மங்கையர் பங்கய வாள்முகத்து

உருவ உண்கணை ஒண்பெடை ஆம் எனக்
கருதி அன்போடு காமுற்று வைகலும்
மருத வேலியின் வைகினை வண்டு அரோ [55]

[பங்கயம்=தாமரை; கணை=கண்ணை; வேலி=நிலம்]

மருத நிலத்தில் ஒரு காட்சியைக் காட்டுகிறான் கம்பன். அதன்மூலம் கோசல நாட்டு மகளிரின் அழகையும் காட்டி விடுகிறான். மருத நிலத்தில் வண்டுகள் தங்கி இருப்பது இயல்பான ஒன்று. அதில் தன் குறிப்பை ஏற்றி இப்பாடலில் கம்பன் பாடி உள்ளான். மங்கைப் பருவம் அடைந்த மகளிரின் முகங்கள் தாமரை மலர் போன்று இருக்கின்றன. அவர்களின் அழகிய மை பூசப்பட்ட கண்கள் அத்தாமரை முகத்தில் பெண்வண்டுபோல் இருக்கின்றன. ஆதலால் அக்கண்களைப் பெண் வண்டென எண்ணி ஆசையோடு காமம் கொண்ட ஆண் வண்டுகள் அந்த மருத நிலத்திலேயே தங்கின.
[19:14, 02/02/2022] Azhagiyasingar: https://daily.navinavirutcha