வீணாய்ப் போன குடைகள்/அழகியசிங்கர்

இப்போதெல்லாம்
பெரும் மழையாகப்
பெய்கிறது

ஜன்னல்
வழியாக வெயிலைப்
பார்க்கிறேன்

ஒருநாள்
லேசாகத் தூறல்

குடைகளைப்
பார்த்தேன்
எல்லாம்
ரிப்பேர்
ஒரு குடை மட்டும்
சரியாக இருந்தது

திறந்து பார்த்தேன்
பல்லி
குடியிருந்தது
ஐயோ என்று
மூடி விட்டேன்

One Comment on “வீணாய்ப் போன குடைகள்/அழகியசிங்கர்”

Comments are closed.