படி ….கொலுப்படி

வவேசு

படியில் கொலுவிருக்கும் பொம்மைகள்
நாம் பார்க்க
அசையாதிருந்துவிட்டு

நாம் தூங்கும் போது
ஓடி விளையாடுமாம்

குழந்தை
சொல்லிவிட்டு உறங்கிவிட்டாள்

பொம்மைகள்
விழித்துக் கொண்டன.