ஈரம்/அழகியசிங்கர்

மனிதர்கள்
ஈரம் இல்லாமல் இருப்பார்களா
இருப்பார்கள்
கொலை பாதகம் செய்பவர்கள்
மனநிலை சரியில்லாதவர்கள்

சுயநலம் மிக்கவர்களும்
இதில் சேர்க்கலாம்

ஆனால்
இதில் உங்களுக்குமிடமில்லை
எனக்குமிடமில்லை
ஏனென்றால் நாம் கவிதை வாசிப்பவர்கள்
கவிதை எழுதுபவர்கள்

One Comment on “ஈரம்/அழகியசிங்கர்”

  1. கவிஞர்களும் கவிதைப்ரியர்களும்
    மென்மையான
    உள்ளம் படைத்தவர்கள்
    ஈரநெஞ்சுடையவர்கள்
    என்று சொல்கிறார். எந்தக் கவிஞரோ கவிதை ப்ரியரோ ‘இல்லை எனக்கு
    ஈர மற்ற நெஞ்சு ‘என்று பதில் சொல்வார்களா இனி!

    ஜான்னவி

Comments are closed.