வையக வாழ்க்கை/ஆர்க்கே

தெருவுள் புகுந்து கடக்கையில்
நீயென்ன
ஜாதியென்றனர்..!

மாவட்டம் மாறி நகர்ந்தபோது
மதமும் ஊரும்
விசாரித்தனர்..!

மாநில இடப்பெயர்வில்
தாய்மொழி
எதுவென்றனர்…

வெளிநாடு சென்றான பின்
இந்தியன் எனக்கொண்டாடினர்.
ஜாதியும் மதமும்
ஊரும் தாய்மொழியும்
வையக வாழ்க்கை
புள்ளியில் ஒடுங்கியது.

One Comment on “வையக வாழ்க்கை/ஆர்க்கே”

  1. வெளிநாட்டில் நாமெல்லாரும் இந்தியரே
    என்று குறுகிய ஜாதி மத
    மொழி வேறுபாடுகளைக் கொண்டாடும் அற்ப புத்தி படைத்தவர்களுக்கு ‘சுளீர்’
    என்று அடி கொடுத்திருக்கிறார்.

    ஜான்னவி.

Comments are closed.