தரைக்கும் வானத்துக்கும்/வண்ண தாசன்

எங்கெங்கோ இருந்த வீட்டின்
பழைய மரச் சன்னல்களை
விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
யார் யாரின் முகங்களோ
சன்னல்களின் வழியே
எங்கெங்கிருந்தோ
எட்டிப்பார்க்கின்றன என்னை.

4 Comments on “தரைக்கும் வானத்துக்கும்/வண்ண தாசன்”

  1. எனது அபிமான எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் கவிதையை வெளிநாட்டுக்கு மிக்க நன்றி.

  2. இனி பழைய மரச் சன்னல் கதவுகள் கடைகளை தாண்டும் போதெல்லாம் எனக்கும் தோன்றலாமோ சன்னல் முகங்கள்? இல்லாவிட்டால் என்ன? வண்ணதாசன் மட்டுமாவது நிச்சயம் மனதில் நிழலாடுவார்.

  3. இனி பழைய மர சன்னல் கதவுகள் விறகும் கடைகளை கடக்கும் போதெல்லாம் எனக்கும் சன்னல் முகங்கள் தோன்றலாமோ?
    அட…இல்லையென்றாலும் வண்ணதாசன் நினைவாவது நிழலாடாமலா போகும்?

  4. பழைய மரச் சன்னல்கள்
    மட்டுமா, பழைய மரக்
    கதவுகளை பாதி திறந்து
    எட்டிப்பார்த்து அவற்றை ஒருக்களித்தவாறு ஆடிக்கொண்டிருக்க விட்டு விட்டு மறையும் முகங்களையும் நம்மைக்
    கற்பனை செய்துத்
    தேட வைக்கிறது.

    ஜான்னவி.

Comments are closed.