இது மரம் அல்ல/வண்ணதாசன்

இது மரம் அல்ல, பலகை
என்று நினைக்கிறவன் தச்சன் ஆகிவிடுகிறான்.
இது பலகை அல்ல, மரம்
என்று நினைக்கிறவன் கவிஞன்
ஆகி விடுகிறான்.
தச்சனைக் கவிஞனும்
கவிஞனைத் தச்சனும்
அழகானசிலுவைகளில்
அறைந்து கொள்கிறார்கள்.