சில குறுங் கவிதைகள்/ ஜான்னவி

சில கேள்விகள்(1)

ஒளிர்கிறது நீரோடை நிலவில்
என்னைப்பார்த்து
புன்னகைப்பது
நீரோடையா,
நிலவா?

🦋🦋🦋

சில கேள்விகள்(2)

யாருடைய துயரம் இது?
பெருமூச்செறிவது
காற்றா , மரங்களா?

     🦋🦋🦋

சில கேள்விகள்(3)

காற்று கொண்டு
வந்திறைக்கிறது
வண்ண இலைகளை
எனக்கு, உனக்கு, அவளுக்கென
ஆனால் அது கொண்டு வந்த
சேதி யாருக்கு?

  🦋🦋🦋

                

One Comment on “சில குறுங் கவிதைகள்/ ஜான்னவி”

Comments are closed.