அன்புடைமை/க. மோகனரங்கன்

அன்பு
என்பது வேறொன்றுமில்லை
மதுரம்தான்.
நான்
ஒவ்வொரு முறையும்
உங்களுக்குப் பருகத்தரும்
தேநீரில்
அது
ஒரு சிட்டிகை
கூடுதலாகவோ அல்லது
குறைவாகவோ
அமைந்து விடுகிறது.
அரிதாக
அன்றொரு நாள்
அளவாகக்
கலந்து வைத்துக்
காத்திருந்தபோது
நீங்கள்
தாமதித்து வந்ததால்
ஆறிப்போய் விட்டிருந்தது.
அன்பு
என்பது
பருக முடியாத
துயரமும் தான்.

o