நான்மணிக்கடிகை/மா கோமகன்

“நா அன்றோ நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை

விடும் அன்றோ வீங்கப் பிணிப்பின்? அவாஅப்

படும் அன்றோ பல் நூல் வலையில்? அடும் அன்றோ

மாறு உள் நிறுக்கும் துணிபு”

விளக்கம்:

  1. பதறிய நாக்கால் நட்பு கெடும்.
  2. கட்டாயப்படுத்தினால் பேதைகளின் நற்செயல்கள் கெடும்.
  3. நூல்களை பயில்வதால் எவருக்கும் ஆசை கெடும்
  4. ஒருவர் மீது தீராத பகைமை கொண்டால் நமக்கு நாமே கெடுவோம்.