வண்ணதாசன் குறுங்கவிதை

குதித்துக் குதித்துப் பறித்த பூ
எட்டவில்லை.
இலையிடை மலர்ந்திருந்த
வேறொரு கண்காணாப் பூ
உதிர்ந்தது
குதிப்பின் அதிர்வடங்காத் தரையில்.